அன்பே! காற்றிடம் தூது விட்டு காத்திருந்தேன்..
உன் மூச்சு காற்று என் மீது மோதுவதற்கு!
Wednesday, April 25, 2007
Monday, April 23, 2007
என் செல்ல கன்னுகுட்டி
இன்று காலை, இரண்டரை வயது மகன் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தார். ஏற்கனவே ஜலதோஷம் பிடித்திருந்தது. அதனால், அவரை திட்டினேன். உடனே.., சில வார்த்தைகளே பேசி வரும் அவர் "னோ சாக்லேட் பார் யு" என்றார். எனக்கு ஆச்சரியம்! சிரிப்பை அடக்கி கொண்டு, என்னம்மா செல்லம்? என்றேன். மறுபடியும், மிக தெளிவாக "னோ சாக்லேட் பார் யு" என்றார். நான், கெஞ்சி, "ப்லீஸ் மா செல்லம், அம்மா சாரி சொல்றேன், ஒரே ஒரு சாக்லேட் கொடுங்கமா" என்றேன்!அதற்கு ஒரு கணம் யோசித்து, "அம்மா, சாக்லேட் பினிஷ்" என்றாரே பாருங்கள், என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை! என் செல்ல கன்னுகுட்டி!
Tuesday, April 17, 2007
வீரனே, தலை வணங்குகிறேன்!
இன்று, உமேஷ் சன்த்ரா என்ற ஒரு காவல் துறை அதிகாரியை பற்றி படிக்க நேர்ந்தது. நாம் நம்பிக்கை இழந்து விட்ட காவல் துறையில் ஒரு உயிர் ஒளியாக உருவாகி, மிக விரைவிலேயே ஜோதியாகி மறைந்த அந்த வீரனை அறிந்தவர் யாரும் மறக்க முடியாது. அவர் பெயரில் உள்ள வலை தளம்:- http://www.umeshchandra.org
இவரது வீர வரலாறு என்றும் நம் மனதில் அழியாது.
தாமரை.
இவரது வீர வரலாறு என்றும் நம் மனதில் அழியாது.
தாமரை.
வணக்கம்
நண்பர்களே!
இந்த வலை கடலில் நானும் ஒரு துளியாக சேர்கிறேன். என்னுள் தோன்றும் எண்ண அலைகளை இங்கு இசைக்க விரும்புகிறேன்.
அன்புடன் - தாமரை
இந்த வலை கடலில் நானும் ஒரு துளியாக சேர்கிறேன். என்னுள் தோன்றும் எண்ண அலைகளை இங்கு இசைக்க விரும்புகிறேன்.
அன்புடன் - தாமரை
Subscribe to:
Comments (Atom)